நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் வருகின்ற 16ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. 

அதனடிப்படையில் இந்த மாதம் வருகின்ற 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மாவட்டத்தில் நடைபெறும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கல்வி தகுதி:

10-ம் வகுப்பு,

12-ம் வகுப்பு,

ஐடிஐ,

பட்டப்படிப்பு,

முதுநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுகளை தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Private employment camp on June 16th in Nagapattinam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->