26 ஆம் தேதி மீண்டும் மாணவர்களுக்கு ஆப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
online class again starts at sep 26
இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 25-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என்றும், இதை மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்படும் என்று தெரிய வருகிறது.
English Summary
online class again starts at sep 26