தமிழகத்தில் இன்று எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது, அதிலிருந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அதி மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் குடியிருப்பில் மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றும் பணி மேலும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில்,  தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nov 29 school and college leave


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->