பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - கல்வித் துறை எச்சரிக்கை!
No special classes in schools Education department
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதற்கான சுற்றறிக்கை விட்டும் அதைமதிக்காமல் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்திவருவது தொடர்கதையாகிவருகிறது .
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.இந்தநிலையில் அரையாண்டு தேர்வு முடிந்த மறுநாள் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவதை நம் கண்கூடாக பார்க்கமுடிந்தது.
இந்தநிலையில் சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கு பள்ளிக்கல்வித் துறை கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்று அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அவ்வாறு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதுதொடர்பான உத்தரவை முறையாக பின்பற்ற அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித் துறை அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தும் ,அதற்கான சுற்றறிக்கை விட்டும் அதைமதிக்காமல் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்திவருவது தொடர்கதையாகிவருகிறது .
English Summary
No special classes in schools Education department