இளைஞர்களே தயாரா இருங்க.. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தில் காலியாக உள்ள 8000 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியத்தில், கிட்டத்தட்ட 8,000 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் அதில் 8000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தேர்வு நடைமுறையில் நிலுவையில் உள்ளதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது.

அதே சமயம் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.எ னவே விரைவில் தமிழ்நாடு மின்வாரியத்தில் 8000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8000 job vacancy in Tamil Nadu Electricity Board


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->