தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!!
18 nov school leave in tamilnadu
தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, திண்டுக்கல், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தருமபுரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை எச்சரிக்கையால் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது, வழக்கம் போல் கல்வி நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
18 nov school leave in tamilnadu