பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?.!
பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?.!
நாம் இரவில் உறங்கும் போது, கனவு வருவது சாதாரண ஒன்று தான். அதில் வரும் சம்பவத்திற்கு என்ன பலன்கள் நடக்கும் என தெரிந்துகொள்வோமா?.!
*. மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் புதியவர்களின் வருகையால் மேன்மையான சூழல் உண்டாகும்.
*. குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் - காரியசித்தி உண்டாகும்.
*. குடும்பத்தில் கர்ப்பிணி பெண் இருந்தால் தர்ப்பணம் கொடுக்கலாமா - கொடுக்கலாம்.
தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
*. பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் - காரியத்தடைகளும் அதனால் ஏற்பட்ட சில சங்கடங்களும் அகலும்.
*. பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா? -பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லது. சுபச் செய்திகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். காரியசித்தி உண்டாகும்.