மீண்டும் கடன் தொல்லையால் ஒருவர் பலி...! கலெக்டர் அலுவலக பணியாளருக்கு நேர்ந்த துயரம் என்ன...?
Another person dies due to debt What tragedy that befell Collectors office employee
கன்னியாகுமரியில் புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான 'ரசல் ராஜ்' என்பவர். இவர் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இதில் கடந்த சில தினங்களாக ரசல் ராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடன் தொல்லையும் இருந்து வந்ததாக தெரிகிற நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளான 'ரசல் ராஜ்' நேற்று முன் தினம் வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்திலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தன்னை மாய்த்துக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவலர்கள், விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் கடன் தொல்லையால் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
Another person dies due to debt What tragedy that befell Collectors office employee