மேற்குவங்கம் : மீண்டும் ஒரு நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் ரசிகர்கள்.!
West Bengal actress hanged suicide
சமீப நாட்களாக இளம் நடிகர்கள் நடிகைகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த தற்கொலைகளும் மர்மமாகவே உள்ளது.
தமிழகத்தின் சின்னத்திரை நடிகை சித்ரா தொடங்கி பல மரணங்களுக்கு உண்மையான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. சங்கத்தில் கேரளாவில் அடுத்தடுத்து இரண்டு இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க மாநில நடிகையும் மாடல் அழகியுமான 21 வயது பிதிஷா டீ மஜூம்தார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நடிகை வீட்டில் தற்கொலை செய்துகொள்ளும்போது யார் யாரெல்லாம் இருந்தார்கள் மற்றும் உறவினர்கள் நெருங்கிய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் முக்கிய ஆதாரமாக கருதப்படும் நடிகையின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், நடிகை அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஆண் நண்பருடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரையும் பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
West Bengal actress hanged suicide