தமிழகத்தில் நவம்பர் 1 முதல் புதிய படங்களுக்கான பணிக்கு தடை - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய படங்களுக்கான பணிகளை தொடங்கக்கூடாது என்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்டவற்றுடன் நடத்திய பேச்சுவார்த்தை தற்போது சுமுகமாக வந்துள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முழுமையாக பேச வேண்டி இருப்பதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

மேலும் நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Flim Producer Announcement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->