சுட்டெரிக்கும் வெயில்: மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு - அசத்திய சூர்யா நற்பணி இயக்கம்.! - Seithipunal
Seithipunal


அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் செயல் தலைவர் ஆர்.ஏ. ராஜு, அமைப்பாளர் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவித்திருப்பதாவது, 

தற்போது வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு உதவும் விதமாக உங்களது பகுதியில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 

அதேபோல் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியும், விலங்குகளுடைய தாகத்தை தீர்க்க ஏற்ற இடங்களில் தண்ணீர் தொட்டிகள் போன்றவை அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 

தண்ணீர் பந்தல் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமலும் உரிய அனுமதி பெற்று அமைக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

surya charity movement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->