நடிகர் விஜய் குறித்து என்னிடம் கேட்காதீர்கள்.. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்.!
SA chandrasekhar speech about son Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால், இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனரான அவர் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது தந்தை சந்திரசேகர் ஆர்வத்தில் சில செயல்களை செய்துள்ளார். ஆனால் அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதன் பிறகு பெரும்பாலும் இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள புத்திர கமேட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
சாமி தரிசனம் செய்த பிறகு செய்தி அவர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவாரா? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஆவேசமடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என வேகமாக பதில் அளித்துவிட்டு சென்றுள்ளார்.
English Summary
SA chandrasekhar speech about son Vijay