கங்குவா தோல்வி: விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி! 
                                    
                                    
                                   Kanguva Flop chennai hc order 
 
                                 
                               
                                
                                      
                                            கங்குவா திரைப்படம் பொதுமக்களின் விமர்சனங்களால் படுதோல்வியை சந்தித்த நிலையில், இதனை ஏற்க மறுத்துள்ள தமிழ்த் திரையுலகம், கங்குவா திரைப்படம் சூப்பர் என்றும், திட்டமிட்டு படத்தை விமர்சனம் செய்தி தோல்வியடைய வைத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், பெரிய பட்ஜெட் படங்களை குறித்த எதிர்மறை விமர்சனங்கள் படங்கள் தோல்வி அடைவதற்கு காரணமாக உள்ளதாகவும், திரைப்படங்களில் நடித்த நடிகர் மற்றும் இயக்குநர் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும், இதனை முறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், திரைப்படம் வெளியாகி முதல் 3 நாள் படம் குறித்து விமர்சிக்க (தியேட்டர் ரிவியூவ்) தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி சவுந்தர், இந்த வழக்கில் மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், அவதூறு பரப்பும் செயல்களை எதிர்க்க காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என்றும் நீதிபதி சவுந்தர் அறிவுரை வழங்கினார்.
விமர்சனங்களை முழுமையாக தடுக்க மறுத்த நீதிபதி சவுந்தர், கருத்து வெளியிடும் உரிமை எல்லைகளில் நடைபெறும் விவாதங்களை நோக்குமாறு அறிவுறுத்தினார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Kanguva Flop chennai hc order