"உடன்பிறப்பே" இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா ஜோதிகா? - வெளியானது முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, நடிகர்களான ஜோதிகா, சசிகுமார் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் உடன்பிறப்பே. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தயாரான இந்தப் படத்தில் ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமாரும் கணவராக சமுத்திரக்கனியும் நடித்து இருந்தனர். 

இரா.சரவணன் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஜோதிகா விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான கதையை உருவாக்கும்படி இயக்குனர் இரா.சரவணனிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவரும் கதையை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த வருடம் 'காதல் தி கோர்' என்ற மலையாள படம் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் சைத்தான் என்ற இந்தி படத்திலும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jothika announce work in udanpirappe 2 movie


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->