கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் - பொன்னியின் செல்வனுக்கு என்ன ஆனது?  - Seithipunal
Seithipunal



வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து, நடிப்பில் தனித்திறமையை காட்டி வரும் நடிகர் ஜெயம் ரவி, அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், பொன்னியின் செல்வனாக அசத்தியிருந்தார்.

தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது, அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி இருப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் அந்த ட்விட்டர் பதிவில், "நேற்று மாலை (அக்டோபர் 21) எனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாக உள்ளது.

நான் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

வெளியே செல்லும்போது முக கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஜெயம் ரவிக்கு நோய் தொற்று உறுதியாகி இருப்பது, அவர்களின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeyam Ravi Corona Affected


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->