பிக்பாஸில் விழப்போகும் அடுத்த விக்கெட்.! உள்ளே இறங்கும் இரண்டு லட்டுக்கள்.!
biggboss 3 next entries
கடந்த இரண்டு வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். சரவணன், சாக்ஷி, மதுமிதா மற்றும் அபிராமி என நான்கு பேர் மொத்தமாக வெளியேறி இருக்கின்றனர்.
கலகலப்பும், பரபரப்பும் குறைவாக இருக்கிறது என்று, கஸ்தூரி மற்றும் வனிதா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் உள்ளே அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக மது வெளியினார்.
அதனை தொடர்ந்து, சென்ற வார எலிமினேஷனில் அபிராமி வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மேலும், இரண்டு பிரபங்கள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த பிரபலங்களில் ஒருவர் ராஜா ராணி சீரியல் நடிகை ஆலியா மானசா என்றும், மற்றொருவர் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இந்த வாரம் கஸ்தூரி ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.