ரொம்ப புதுசா இருக்கு.. அனிதாவால் கவலையடைந்த கணவர்.!
anidha husband speech about anitha sampath
கடந்த அக்டொபர் 4 ஆம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கியது. இதில் பங்கேற்கும் 16 போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன். அதன் பின்னர், வைல்டு கார்டு என்ட்ரியாக பிரபல விஜேவான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
பிக்பாஸ் 4 வீட்டில் இருக்கின்ற அனிதாவுடைய கணவர் தன்னுடைய மனைவி அனிதா குறித்து இன்ஸ்டாகிராமில் மிகவும் ரு உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "என் மனைவியை பிரிந்து இன்றுடன் 30 நாட்கள் ஆகின்றது. நாங்கள் காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் திருமணமாகியும் இத்தனை வருடங்களில் இவ்வளவு நாள்எல்லாம் பிரிந்ததே இல்லை.
எனக்கே இதெல்லாம் புதிதாக இருக்கிறது. என் செல்லம்மாவை நான் மிகவும் மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றார்.
அனிதா சம்பத் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர். மீம்ஸ்களை போட்டு இணையவாசிகள் அவரை பிரபலமாகினர். இதன் மூலம் கிடைத்த புகழினால் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.
English Summary
anidha husband speech about anitha sampath