நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு.. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.!
ADMK EPS condolences to Ajit Kumar father passed away
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு அதிமுக இடிக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் குமார் நடிக்கும் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் (வயது 84) உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார். அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து திரையுலகினரும் அவரது ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்' என தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS condolences to Ajit Kumar father passed away