கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்.. குஷ்பு எடுத்த முடிவால் ரசிகர்கள் சோகம்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார்.

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. அதன்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதன் பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களை மட்டும் நடித்த இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

முதலில் திமுகவில் இருந்த குஷ்பூ அதன்பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது அவர் பாஜகவில் இணைத்து கொண்டு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இதில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு சமீபத்தில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகுவதாக குஷ்பூ அறிவித்திருக்கிறார்.


 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'நண்பர்களுக்கு வணக்கம், எனக்கு கொஞ்சம் டீடாக்சிஃபிகேஷன் தேவை என்பதால், ரேடாரில் இருந்து வெளியேறுகிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள், பாசிடிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress khushbu break from social media


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->