விஜய் வழக்கு.. வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார். அந்த காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிகவரித்துறை அபராதம் விதித்தது. இதற்கிடையே விஜய் தரப்பில் ஏற்கனவே நுழைவு வரி  செலுத்துப்பட்டுவிட்டது என தெரிவித்தனர். 

அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளேன். ஆகவே அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மார்ச் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிகவரித்துறை கூறியது. இது குறித்து மேலும் சில விவரங்களை கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வாழ்கையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். 

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து நிலையில் இந்த வாழ்க்கை தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி,  நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளும் வைக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor vijay case in ch court


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->