அரண்மனை 4 படத்தில் நடிப்பது சவாலாகவே இருக்கிறது - நடிகை தமன்னா.!  - Seithipunal
Seithipunal


சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றிகரமாக வெளியான படம் அரண்மனை. மூன்று பாகங்களில் ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருக்கும் நகைச்சுவையை ரசிகர்கள் அதிகம் ரசித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தில், ராஷி கண்ணா, தமன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நடிகை தமன்னா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

அத்துடன் இந்தப் படத்தில் நடிப்பது கொஞ்சம் சவாலானதாக எனக்கு இருந்தாலும் ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளை நான் ரசித்தே செய்தேன். அரண்மனை பட வரிசையில் நானும் இருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி “ என்று தெரிவித்துள்ளார். வரும் மே மாதம் 3ம் தேதி அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor thamannaah tweet about aranmanai 4 movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->