செல்ஃபீ எடுத்து முடித்து வைத்த நடிகர் சிவகுமார்.! வெளியான பரபரப்பு தகவல்.!
actor sivakumar corona negative
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தியின் தந்தை சிவகுமார் கொரோனா தோற்று ஏற்பட்டு, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில், ஒரு வாரமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
மேலும், அவருக்கு அறிகுறி ஏதும் இல்லாத கொரோனா தொற்று உள்ளதாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், தனக்கு ஏதும் இல்லை என்று சொல்லும் விதமாக, தன் வீட்டிலிருந்து ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகுமார். மேலும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
actor sivakumar corona negative