கே.ஜி.எஃப்-2 படத்தை பார்த்துவிட்டு, மெய்சிலிர்த்துப்போன அல்லு அர்ஜுன்.! இயக்குனர் குறித்து கூறிய விஷயம்.! - Seithipunal
Seithipunal


கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து.கே ஜி எஃப் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. கடந்த மாதம் கே ஜி எஃப் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  தனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த  14ஆம் தேதி கே ஜி எஃப்  இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் ஜி எஃப் 2-ஆம் பாகம் வெளியானது. 

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் இதுகுறித்து, " கே.ஜி.எஃப் படக்குழுவினரின் வெறித்தனமான உழைப்பு மற்றும் நடிப்பு காந்தம் போல இருக்கிறது. சினிமாவில் ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்த பிரசாந்த் நீல்ஸ்க்கு நன்றி." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Allu Arjun speech about KGF-2


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->