பிரியாணி மீது குறையாத காதல்.. ஒரு வினாடிக்கு 2 பிரியாணி.. ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி.! - Seithipunal
Seithipunal


2021ஆம் ஆண்டு இன்னும் எட்டு நாட்களில் முடிவடைய உள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடு என 2021 ஆம் ஆண்டு சென்றதே தெரியாத அளவிற்கு கொரோனா மக்களை வாட்டி வதைத்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆர்டர்கள் குறித்த அறிக்கையை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளோ வெளிநாட்டு உணவுகள் வந்தாலும் பொதுமக்கள் மத்தியில் பிரியாணிக்கு இருக்கும் தனி இடத்தை வேறு எந்த உணவாலும் பிடிக்க முடியவில்லை. 

2021 ஆம் ஆண்டில் ஸ்விகி நிறுவனத்தில்  6 கோடிக்கு மேற்பட்ட பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு வினாடிக்கு இரண்டு பிரியாணி வீதம், ஒரு நிமிடத்திற்கு சுமார் 115 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டில் ஸ்விகியில் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 90 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. பிரியாணி மீதான காதல் 2021 ஆம் ஆண்டில் உயர்ந்து இருக்கிறது என ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

swiggy statement for 2021 year indians order 115 biriyani per minute


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->