தேனிக்கு கொண்டுச் செல்லப்படும் பவதாரணி உடல்.! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக பவதாரணி உடல் வைக்கப்பட்டது. பவதாரணியின் மறைவிற்கு பலரும் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சுதா கொங்கரா, நடிகர் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர். 

இந்த நிலையில், பவதாரணியின் உடல் இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. தேனி லோயர்கேம்பில் உள்ள இளையராஜா தோட்ட வளாகத்தில் தயார் மற்றும் பாட்டி சமாதிகளுக்கு அருகே பவதாரணி உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singer bavatharani body taken to theni


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->