21 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை - வானிலை மையம் தகவல்.!
rain to 21 districts in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain to 21 districts in tamilnadu