மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா அண்ணாமலை? - வெளியானது முக்கிய அறிவிப்பு.!
annamalai press meet for election
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என்பது மூன்று நாட்களில் தெரியவரும்.
கூட்டணி அமைப்பதில் உங்களைப் போல நாங்களும் அவசரமாக தான் இருக்கிறோம். தேர்தல் களத்தில் சவாலாக எதையும் பார்க்கவில்லை. களம் எங்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai press meet for election