அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் - டி. ராஜேந்தர் பரபரப்பு பேட்டி.!
actor tr speech about actor vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்காக, பல நடிகர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில், தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நடிகர் டி.ராஜேந்திரன் வந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் மகன் சிம்புவின் பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாளுக்காக ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கி அன்னதானம் கொடுக்க வேண்டும் என்று இங்கு வந்துள்ளேன்.
அவர், தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதற்கான முன் தயாரிப்பு அவசியம். அதனாலேயே இத்தனை காலம் ஆகிவிட்டது.
இதற்காக உடனே, படம் கைவிடப்பட்டது என்று செய்தி பரப்பாதீர்கள். சிம்பு வாழ்வில் அடுத்தக் கட்டம் செல்ல வேண்டும். அதற்காக, பெரிய ஒரு வெற்றியை கொடுத்துவிட்டு ரசிகர்களை சந்திப்பதாகக் கூறியுள்ளார். எனக்கும் அது சரி என்று பட்டது” என்றார்.
அப்போது, அவரிடம் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு, “அரசியல் என்பது பொதுவழி. அதில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதில், அவர் வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மேலும், இதைப்பற்றி நான் செய்ய விரும்பவில்லை விமர்சனம். நான் வேண்டுவது எல்லாம் தமிழ்நாட்டு மக்களும் விமோசனம்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
actor tr speech about actor vijay