#திருவண்ணாமலை || டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி.!!
4 person died in accident in thiruvannamalai
அதிகாலையில் டிராக்டர் மீது கார் மோதி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் சின்ன காங்கேயனூர் நோக்கி சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது வேகமாக மோதியது. பின்னர், பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
4 person died in accident in thiruvannamalai