#திருவண்ணாமலை || டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


அதிகாலையில் டிராக்டர் மீது கார் மோதி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இன்று அதிகாலை 3 மணி அளவில் சின்ன காங்கேயனூர் நோக்கி சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது வேகமாக மோதியது. பின்னர், பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 person died in accident in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->