பள்ளி, கல்லூரி செல்லும் வழியில் டாஸ்மாக் கடை - வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாட்டுமேஸ்திரி சந்து, தெற்கு வீதியையும் பழைய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் முக்கிய வழியாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருவதால் மது குடிப்பவர்கள், அப்பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இதனால் இந்த மதுக் கடையை அகற்றுமாறு அப்பகுதி வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

இந்த நிலையில், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், உடனடியாக மதுபானக் கடை அகற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanjai tasmac shop issue protest


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->