ஒரே நாடு ஒரே தேர்தல்.. அதிமுக தான் வெல்லும்.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பேச்சு..!! - Seithipunal
Seithipunal


கோவையை தமிழகம் முதல்வர் மு.க ஸ்டாலின் புறக்கணிப்பதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட எதுவும் பேசாமல் மௌனம் காக்கின்றன. இது கோவை மக்களை வஞ்சிக்கும் செயல்.

தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் அதிமுக தான் முழு வெற்றி பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் தமிழகத்தில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்" என பேசி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sp velumani said AIADMK will win in one election one country


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->