திருச்சியில் நடக்க போவது இதுதான்... ரகசியத்தை உடைத்த பிரேமலதா.!!
AIADMK alliance loksbha candidate introduce in Trichy meeting
திருச்சி பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் உரைமேடையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளார்கள் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்த் நினைவிடத்தில் மழை தூவி மரியாதை செலுத்தினார்.
தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி வரும் மார்ச் 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பிரச்சார துவக்க விழாவுக்கு வருமாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "வரும் மார்ச்24ஆம் தேதி நடைபெறும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வருமாறு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணி சார்பில் திருச்சியில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறோம். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்தி வருகிறோம். இன்னும் ஒரு இரு நாட்களில் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK alliance loksbha candidate introduce in Trichy meeting