அமெரிக்கவில் மீண்டும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு! 7 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹேரி டோட் பூங்காவில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் தகோமா புறநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் 5 பேரை மீட்க வந்த மீட்புப் படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்; மேலும் 2 பேர் சுயமாக மருத்துவமனைக்கு சென்றனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

சம்பவம் நேரத்தின் போது பூங்காவில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிவைக்கப்பட்ட தாக்குதலா? யார் இதற்குப் பின்னால் உள்ளனர்? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முன்னதாக, பிலடெல்பியாவில் நிகழ்ந்த தாக்குதலில் 9 பேர் காயமடைந்து, 2 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

USA Gun Fire in park 7 people injured


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->