பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.! இருவர் பலி - 6 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்து குஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நாட்டில் சில பகுதிகளை உலுக்கி உள்ளதாக பாகிஸ்தான் புவியியல் துறை தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் மட்டுமட்டுல்லாமல் பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர், இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வாடா மாநிலங்களிலும் நிலா அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயமடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died and six peoples injured for earthquake in pakisthan


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->