அமெரிக்காவில் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது மாயமான 2 இந்திய மாணவர்கள் - பிணமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது மாயமான 2 இந்திய மாணவர்கள் - பிணமாக மீட்பு.!

அமெரிக்கா நாட்டில் இண்டியானா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ஆர்யன் வைத்யா , சித்தாந்த் ஷா உள்ளிட்ட இரண்டு மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 15-ந் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள மன்ரோ ஏரிக்கு சென்றனர். 

அங்கு அவர்கள் அனைவரும் படகு சவாரி செய்த போது படகை ஏரியின் நடுப்பகுதியில் நிறுத்திவிட்டு ஏரியில் குதித்து நீச்சல் அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென இந்திய மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த நண்பர்கள் அவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். 

ஆனால் அவர்களால் இருவரையும் காப்ற்ற முடியவில்லை. அதற்குள், மாணவர்கள் இருவரும் மாயமாகினர். இதையடுத்து சக மாணவர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். 

பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் மூழ்கி மாயமான இரண்டு மாணவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two indian students died drowned lake in america


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->