சுற்றுலா சென்ற  பெண் உயிரிழப்பு; இதயத்தை காணவில்லை என உறவினர்கள் புகார்! - Seithipunal
Seithipunal


சுற்றுலா சென்ற  பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரது உடலில் இதயம் இல்லாததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியை சேர்ந்த தம்பதி பெத் மார்ட்டின் மற்றும் லூக் மார்ட்டின். இந்த தம்பதி தனது 2 குழந்தைகளுடன்  கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.

இஸ்தான்புல் நகருக்கு சென்ற சில மணி நேரத்தில்  பெத் மார்ட்டினுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுமருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர். உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு பெத் மார்ட்டின் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவெ பெத் மார்ட்டின் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பெத் மார்ட்டினின் உடலை இங்கிலாந்துக்கு கொண்டுவரச்செய்து இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் இதயம் இல்லாததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பெத் மார்ட்டின் உயிரிழந்த விவகாரத்தில் துருக்கியை சேர்ந்த மருத்துவர்கள் உண்மையை மறைப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourist womans death relatives complain that the heart is missing


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->