கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு என்பது இல்லை.. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாற்றம் அடையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது என்றும் அது இன்னும் உருமாற்றம் அடைய வாய்ப்பிருப்பதாகவும் உலக சுகாதார மையத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக அழியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no end to the Corona epidemic Director of the World Health Organization


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->