போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்ட ஈரான் உச்ச தலைவர்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது..!
The death toll in the Iran protests has exceeded 2000
ஈரானில் பணவீக்கம் அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
இதனால், அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி மோசமாக உயர்வடைந்துள்ளது. இதனால் சமாளிக்க முடியாத அந்நாட்டு மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு போராடும் மக்களை கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் நிலைமை மோசமாகியுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஈரானுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மற்றும் நாட்டில் நிலவும் பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியதில் பலரும் பலியாகியுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு இணைய சேவையை துண்டித்துள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 2000-த்தை கடந்துள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
The death toll in the Iran protests has exceeded 2000