இங்கிலாந்து.! காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து.!
Terrible fire accident at paper mill in England
இங்கிலாந்தில் காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள ஸ்மர்ஃபிட் கப்பா காகித ஆலையில் ஞாயிறு இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது கொளுந்துவிட்டு எரிந்து மளமளவென அனைத்து இடங்களிலும் பரவ தொடங்கியது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல மணிநேரம் கடும் போராட்டத்திற்குப் பின்பு கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 8,000 டன் காகிதம் மற்றும் காகித அட்டைகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
மேலும் இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதமோ அல்லது யாருக்காவது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
Terrible fire accident at paper mill in England