வங்காளதேசம் || கொள்கலன் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து.! 5 பேர் பலி.!
Terrible fire accident at container storage warehouse in Bangladesh
வங்காளதேசத்தில் கொள்கலன் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்து உள்ளனர்.
வங்காளதேசம் சிதகுண்டாவில் உள்ள கொள்கலன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின்போது 600 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், 5 பேர் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிர் இழந்து உள்ளனர்.
மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 30 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Terrible fire accident at container storage warehouse in Bangladesh