நெல்சன் மண்டேலா பேத்தி புற்று நோயால் மரணம்!  - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் நெல்சன் மண்டேலா. நிறவெறிக்கு எதிராக போராட்டம் நடத்திய தலைவர்களுள் முக்கியமானவராக திகழ்ந்தவர் இவர். 

இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43) இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் கல்லீரல், நுரையீரல், முதுகு தண்டு போன்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளானது. 

இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இந்த தகவலை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அறக்கட்டளை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது. 

ஒரு சிறந்த எழுத்தாளரான ஜோலேசா மண்டேலா புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவர் தனது வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் மற்றும் நீதியை நிலை நாட்டுவதற்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

south African ex president granddaughter dies


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->