படப்பிடிப்பு தளத்தில், மாடல் அழகிகளுக்கு துப்பாக்கி முனையில் நிகழ்ந்த கொடுமை.! அதிரவைக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்க நாட்டில் இசை ஆல்பத்திற்கு எடுக்கப்பட்ட வீடியோ சூட்டிங் நடைபெற்ற பொழுது எட்டு இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவின் மேற்கு சிறு நகரமான புரோகர்ஸ்டோபின் புறநகர் பகுதியில் மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு துப்பாக்கி ஏந்திய கும்பல் படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்கொடுமையில் செய்துள்ளது 

அத்துடன் படக்குழுவினரை தாக்கிய அந்த கும்பல் அங்கிருந்த உபகரணங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆண்களை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தென்னாப்பிரிக்க நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அந்நாட்டு அதிபர் குற்றவாளிகளை சீக்கிரமாக பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Africa 8 young women raped By gang


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->