கனடாவில் அதிர்ச்சி சம்பவம்.! சீக்கிய இளம்பெண் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


கனடாவில் சீக்கிய இளம்பெண் ஒருவர் சூட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வட அமெரிக்கா நாடான கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் மிஸ்சிசாவ்கா நகரில் பவன்பிரீத் கவுர்(21) என்ற சீக்கிய இளம்பெண் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு உயிர் காக்கும் சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்ட கொலை என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி டிம் நக்தேகால், இந்த சம்பவ பகுதியில் இருந்து கருப்பு உடையுடன் ஒருவர் தப்பி சென்றார் என்றும், அவர் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 18 வயது கொண்ட மேஹக்பிரீத் சேத்தி என்பவரை உயர்நிலை பள்ளி ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sikh girl shot dead in Canada


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->