கெர்சன் பகுதியில் உக்ரைன் மக்களுக்கு அடைக்கலம் தர ரஷ்யா முடிவு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.

மேலும் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள், ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் படையின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், கெர்சன் பகுதியில் உக்ரைன் மக்களுக்கு அடைக்கலம் தர ரஷ்யா முன் வந்துள்ளது.

இது தொடர்பாக மாகாண நிர்வாக தலைவர் விளாதிமீா் சால்டோ வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் உக்ரைன் தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களை வரவேற்க தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரோஸ்டோவ், க்ராஸ்னோடா், ஸ்டாவ்ரபோல் மற்றும் கிரீமியாவிலிருந்து கெர்சன் நகருக்கு வரும் மக்களுக்கு அடைக்கலம் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia decided to refuge Ukraine people in kherson province


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->