மீண்டும் உக்ரைன் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலை மீது ரஷ்யா தாக்குதல்.!
Russia attacks on mariupol factory
மீண்டும் உக்ரைன் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையின் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளதுஆ
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் மிகவும் சேதம் அடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
இந்த ரஷ்யாவின் தாக்குதலில் மரியுபோல் நகரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்நகரில் உள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த குழந்தைகள் உட்பட 101 பேர் ஐநா உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
மேலும், அங்கு பலர் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் ரஷ்ய படைகள் உருக்காலையின் மீது தாக்குதல் தொடங்கி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
English Summary
Russia attacks on mariupol factory