அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்..பாகிஸ்தான் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தன.

இதனைத்தொடர்ந்து இந்த  தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்து ஒழித்தன. மேலும் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

இந்நிலையில் தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட "அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க" இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ready for peace talks Pakistan announces


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->