தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா.. ஒரே ஆண்டில் நான்காவது சோதனை..!
North Korea continues to test missiles
ஒரே ஆண்டில் வடகொரியா நான்கு முறை ஏவுகனை சோதனை நடத்தியது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், பல பொருளாதார தடைகளை ஐநா வடகொரியா மீது விதித்துள்ளது.
ஆனால், வடகொரியா தனது ராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஏவுகணை சோதனையை தொடர்கிறது. ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
இதனால், கோபமடைந்த அமெரிக்கா ஏவுகணை சோதனைக்கு காரணமான 5 பேர் மீது கடுமையான பொருளாதார தடைவிதித்துள்ளது. ஆனால், அதனை கன்டுகொள்ளாத வடகொரியா ரெயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது வட கொரியா. அதன் தொடர்ச்சியாக நேற்று வழிகாட்டி ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றனர்.
English Summary
North Korea continues to test missiles