அதிரடியாக மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா...! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, ஐ.நா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் தொலைதூர ஏவுகணைகளை கொரிய எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவும், தென்கொரியாகவும் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி மேற்கொண்டு வருவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் வடகொரியாவின் ஏவுகணைகள் ஜப்பான் எல்லைக்குள் விழுவதால், ஜப்பானும் வடகொரியாவை எதிர்த்து ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்கொரியா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் ஒருங்கிணைந்த கடல் பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு வடகொரியா ஏவுகணைகள் விழுந்ததாகவும், அதனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடலோர காவல்படை கப்பல்கள் விழிப்புடன் இருக்குமாறும், கடலில் விழுந்த பொருட்களை அணுக வேண்டாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தயாராக இருக்கிறோம் என தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea conducted a missile test again


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->