திருச்சி விமான நிலையத்தில் 977 கிராம் தங்கம் பறிமுதல்.!
gold seized in trichy airport
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் அவ்வப்போது தங்கம் கடத்தி வரும் தொழிலை செய்து வருகின்றனர். அப்படி வரும்போது விமான நிலையத்தில் பிடிபடுவதும் உண்டு.
இந்த நிலையில், துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடமிருந்து சுமார் 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அதாவது 977 கிராம் 24 காரட் தங்கத்தை சுங்க இலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .
ஏற்கனவே இந்தப் பயணி 1081 கிராம் கொண்ட தங்கபேஸ்ட்டை மூன்று கேப்சூலில் வைத்து அதை தனது மலக்குடலில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
gold seized in trichy airport