சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை - நேபாள நீதிமன்றம் உத்தரவு - Seithipunal
Seithipunal


தொடர்ச்சியான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் 

இவர் 1975ல் வட அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்த குற்றத்திற்காக 2003ல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் கைது செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.bமேலும் கனடாவில் செய்யப்பட்ட மற்றொரு கொலையும் நிரூபிக்கப்பட்டு அதற்கான சிறை தண்டனை பெற்று வந்தார்.

இந்நிலையில் நல்ல நடத்தையின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக்கோரி சார்லஸ் சோப்ராஜ் நேபாள அரசிடம் மனு அளித்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஸப்னா பிரதான் மல்லா மற்றும் திலக் பிரசாத் சிரேஷ்டா ஆகியோா் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் 15 நாட்களுக்குள் அவருடைய நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepal court released serial killer Charles Sobraj


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->